20,000 வேலை காலி: அதிர்ச்சி தரும் அர்னால்டு

42 பில்லியன் டாலர் பற்றாக்குறையில் தவிக்கிறது அர்னால்டு ஷ்வார்ஸ்நேக்கர் தலைமையிலான கலிபோர்னியா மாகாண அரசு.
இந்த வார இறுதிக்குள் இந்தப் பற்றாக்குறையைச் சரிகட்டியாக வேண்டுமாம். அப்படி முடியாவிட்டால் 20000 பணியாளர்களை வேலையிலிருந்து நிறுத்தப் போவதாக எச்சரித்துள்ளார் அந்த மாகாணத்தின் கவர்னர் அர்னால்டு ஷ்வார்ஸ்நேக்கர்.
கடந்த டிசம்பரில் கலிபோர்னியாவில் நிதி நெருக்கடியை அறிவித்தார் அர்னால்டு. கூடவே வேலை இழப்புகள் குறித்தும் தெளிவாகக் கூறிவிட்டார். ஆனால் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமைய வேண்டும் என வற்புறுத்தி வருகிறார்கள் எதிர்கட்சியினர்.
இந்த நெருக்கடியிலிருந்து இப்போதைக்கு வெளிவருவது சிரமம்தான் என்றும், எனது கடைசி முயற்சிகள் பலனளிக்காமல் போனால், 20 ஆயிரம் பணியாளர்கள் வேலை இழந்தே தீர வேண்டும் என்றும் அர்னால்டு கூறியுள்ளார்.
ஏற்கனவே கலிபோர்னியா மாகாண அரசில் பணியாற்றும் பல ஊழியர்களும் ஒப்பந்த அடிப்படையில்தான் பணியில் உள்ளனர். எந்த நேரத்திலும் வேலை இழப்புக்கு ஆளாக வேண்டிய சூழல் அவர்களுக்கு. கலிபேர்னியாவின் பொருளாதாரமும் கவலைக்குரிய நிலைக்குப் போய்விட்டது. எனவே 70 சதவிகித மக்கள், அர்னால்டுக்கு எதிரான மனப்போக்கில் உள்ளதாக மீடியா தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications