தஞ்சையில் 3 போலி டாக்டர்கள் கைது!
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: தஞ்சை அருகே போலி டாக்டர் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை கொட்டவா தெருவைச் சேர்ந்தவர்கள் பிச்சை (65), ஜெயக்குமார் (56), குமரேசன் (58). இவர்கள் கிளினிக் வைத்து மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தனர்.
இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக உரிமம் இன்றி அலோபதி மருத்துவம் பார்த்து வருவதாக மனித உரிமை கண்காணிப்பு குழுவைச் சேர்ந்த நிர்வாகி அமீர் சையத் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். சாரணையில் அவர்கள் எம்பிபிஎஸ் படிக்காமலேயே பல வருடங்களாக அப்பகுதி மக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து தஞ்சை இன்ஸ்பெக்டர் முத்தரசு போலி டாக்டர்கள் பிச்சை, ஜெயக்குமார், குமரேசன் ஆகிய மூன்று பேரை கைது செய்தார்.












Click it and Unblock the Notifications