ஈவ் டீசிங் தற்கொலை-2 மாணவர்களுக்கு சிறை
தி்ருச்சி: திருச்சி அருகே ஈவ்-டீசிங் செய்து மாணவியின் தற்கொலைக்கு காரணமான 2 மாணவர்களுக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருச்சி, புத்தூர் சாலை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த நல்லதுரை-காளீஸ்வரி தம்பதியின் மகள் விஜயசாந்தி (18). இவர் உறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
நல்லதுரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இருப்பினும் காளீஸ்வரி தனது மகளை தொடர்ந்து படிக்க வைத்துள்ளார்.
இந் நிலையில் புத்தூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் விஜயசாந்தியை கேலி கிண்டல் செய்ததோடு அவரிடம் ஆபாசமாகவும் பேசியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி இரவு விஜயசாந்தி வீட்டு முன்பு வந்து மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் மனமுடைந்த விஜயசாந்தி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ் விசாரணையில் மணி (21), சுரேஷ் சங்கர் (22) ஆகிய இருவர் தான் விஜய்சாந்தியின் தற்கொலைக்குக் காரணம் எனத் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பெருமாள் குற்றம் சாட்டப்பட்ட மணி, சுரேஷ் சங்கர் இருவருக்கும் தலா 3 வருட சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications