ராணுவத்தின் கொடூர உத்தரவு - தமிழ்ப் பெண்களுக்கு கட்டாயக் கருக்கலைப்பு

Subscribe to Oneindia Tamil

Tamil woman in Vanni jungle
வன்னி: வவுனியா மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணித் தமிழ்ப் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்திற்கு இலங்கை ராணுவம் இனவெறி, மனித வெறி உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வவுனியா மருத்துவமனையின் மருத்துவ உயர் அதிகாரி ஒருவர் விடுதலைப் புலிகள் ஆதரவு இணையதளமான புதினத்திற்கு அளித்துள்ள பேட்டி..

ஏற்கெனவே போரினால் அவலப்பட்டு வரும் தமிழ் கர்ப்பிணிப் பெண்களை, கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றி கருக்கலைப்புக்கு உடன்பட வைக்கப்படுகின்றனர்.

சில பெண்கள், சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட அனுமதி விண்ணப்ப படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைக்கப்பட்ட பின்பு கருக்கலைப்புக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தெரிய வருகின்றது.

நிம்மதி இல்லாமையாலும், நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவதாலும், ஏமாற்றப்பட்டதாலும் பல பெண்கள் ஏற்கெனவே கருக்கலைப்பு செய்து கொண்டு விட்டனர்.

சிறிலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதியில், சிறிலங்கா படை அதிகாரிகளின் உத்தரவுகளுக்கு உட்பட்டு செயற்பட வேண்டியிருப்பதால் - தமிழர்களாக இருந்துகொண்டே இளம் தமிழ் சந்ததி ஒன்றை அழிக்கும் வேலைக்கு துணை போக வேண்டி இருப்பதாக வவுனியா மருத்துமனை தமிழ் மருத்துவ அதிகாரிகள் பலர் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஹிட்லரின் காலத்தையும் மிஞ்சி விடும் வகையில் ராஜபக்சே அரசும், ராணுவமும் போய்க் கொண்டிருப்பதையே இது காட்டுவதாக கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+