காரமடை அருகே சாலை விபத்து - 5 கேரள வாலிபர்கள் பலி
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை அருகே நடந்த திடீர் விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 5 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகேயுள்ள உன்னிபாளையத்தில் இருந்து உரமூட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி ஊட்டிக்கு புறப்பட்டது.
இன்று அதிகாலை காரமடை -மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள டீச்சர்ஸ் காலனி வந்தபோது லாரியை நிறுத்திய டிரைவர், சாலையோரம் உள்ள டீக் கடையில் டீ குடிக்கச் சென்றார்.
இந்த நிலையில் அந்தப் பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று லாரியின் பின்புறம் பலமாக மோதியது. இந்த கோர விபத்தில் கார் டிரைவர் உள்ளிட்ட காரில் இருந்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
போலீஸார் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், விபத்துக்குள்ளான காரில் இருந்த ஐந்து பேரும் கேரள மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஏழூர்களமேச்சேரி மற்றும் காத்தநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications