மருமகளை எரித்து கொல்ல முயன்ற மாமனார், மாமியார் கைது

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் வரதட்சணை கேட்டு மருமகளை துன்புறுத்திய மாமனார், மாமியார் அவரை தீவைத்து கொல்ல முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள தருவை செக்கடி தெருவை சேர்ந்த மந்திரி மனைவி ராணி. இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டாகிறது. இந்நிலையில் மாமியார் ராஜம்மாள், மாமனார் கணபதி ஆகியோர் ராணியிடம் வரதட்சனை கேட்டு கொடு்மைப்படுத்தியதாக தெரிகிறது.

இதற்கிடையே நேற்று ராணி வீட்டில் உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே கணவர் மந்திரி மற்றும் அக்கம்பக்கத்தினர் மீ்ட்டு அவரை நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரது நிலைமை கவலைகிடமாக உள்ளது. ராணி மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த மரண வாக்குமூலத்தில் மாமனார், மாமியார் ஆகியோர் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்ததாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி ராஜம்மாள், கணபதி ஆகியோரை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+