நாளை தமிழக பட்ஜெட்- அன்பழகன் தாக்கல்
சென்னை: தமிழக அரசின் 2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் நாளை தாக்கல் செய்ய இருக்கிறார்.
கடந்த மாதம் ஜனவரி 21ம் தேதி தமிழக சட்டசபை, ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் உரையுடன் துவங்கியது. இதன் மீதான விவாதம் மற்றும் கூட்டத் தொடர் ஒரு வாரம் நடைபெற்றது.
இந்நிலையில் அடுத்த கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் க.அன்பழகன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.
வழக்கமாக தமிழக பட்ஜெட் மார்ச் 20ம் தேதிக்கு பிறகு தான் தாக்கல் செய்யப்படும். ஆனால் இம்முறை நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெற இருப்பதால் சட்டசபை முன்னதாக கூட்டப்பட்டுள்ளது.
தேர்தல் காரணமாக தமிழக பட்ஜெட்டிலும் பல சலுகைகள் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இடம்பெறலாம்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சட்டசபை அலுவலக ஆய்வு குழு கூட்டம் நடத்தப்பட இருக்கிறது. அப்போது இந்தாண்டு சட்டசபை நடைபெறும் நாட்கள் முடிவு செய்யப்படும். அதன்பின் பட்ஜெட் மீது விவாதம் நடைபெறும். அதற்கு அன்பழகன் பதில் அளிப்பார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications