உ.பியில் ஜெயபிரதா கார் மீது கல்வீச்சு
ராம்பூர்: உபி மாநிலத்தின் ராம்பூர் அருகே முன்னாள் நடிகையும், சமாஜ்வாடி கட்சி எம்.பி.யுமான ஜெயபிரதாவின் கார் மீது மர்ம கும்பல் ஒன்று கல்வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஜெயபிரதா காயமின்றி தப்பித்தார்.
உபி மாநிலத்தின் ராம்பூரில் இருந்து முன்னாள் நடிகையும், தற்போதைய சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ஜெயபிரதா தண்டா நகருக்கு வந்து கொண்டிருந்தார்.
அவரது கார் லால்பூர் அருகே பாலம் ஒன்றை கடந்த போது அங்கிருந்த மர்ம கும்பல் ஜெயபிரதாவின் கார் மீது கல்வீச்சில் ஈடுபட்டது.
இதில் ஜெயபிரதாவின் பாதுகாவலர்கள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக ஜெயபிரதா காயம் எதுவும் இன்றி தப்பித்தார்.
இச்சம்பவம் குறித்து அவர் உடனடியாக் அசிம்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் சிலரிடம் இது தொடர்பாக விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications