சென்னை உயர்நீதிமன்றம் எதிரே ரவுடி வெட்டிக் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பாரிமுனைப் பகுதியில் உயர்நீதிமன்றம் எதிரே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் நித்தியானந்தம் (45). இவர் ஒரு ரவுடி.
நேற்று இரவு 10 மணியளவில் பாரிமுனையில், உயர்நீதிமன்றத்திற்கு எதிரே உள்ள சுங்கராம் ரெட்டி தெருவில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டிருந்தார்.
அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4, 5 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்று விட்டது. உயிருக்கு போராடிய நித்தியானந்தத்தை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே நித்தியானந்தம் உயிரிழந்தார். காசி மேடு பகுதியில் ரவுடித்தனம் செய்து வந்த நித்தியானந்தத்தை தொழில் போட்டியில் இன்னொரு ரவுடிக் கும்பல் கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications