மருத்துவமனையில் குழந்தையை விட்டுவிட்டு பெற்றோர் ஓட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 மாத கைக்குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு சென்ற பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏரல் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. கூலிதொழிலாளி. இவரது 5 மாத கைக்குழந்தை கணேசனுக்கு சளி மற்றும் இளைப்பு அதிகமாக இருந்தது. இதனால் குழந்தை கணேசனை கடந்த 16ம் தேதி இசக்கிமுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் ஹோட்டலுக்கு சென்று உணவு வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்ற இசக்கிமுத்து மற்றும் குடும்பத்தினர் அதன்பின்னர் மருத்துவமனைக்கு திரும்பவில்லை.
இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தனர். குழந்தையை தவிக்கவிட்டு விட்டு சென்ற இசக்கிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் தேடி வருகின்றனர்.