கோவையில் இன்று பொதுக்கூட்டம் வைகோ, ராமதாஸ் பங்கேற்பு
கோவை: இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காக்கக் கோரி கோவையில் இன்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் வைகோ, ராமதாஸ், பழ.நெடுமாறன், தா.பாண்டியன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில், கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்களை ராஜபக்சே அரசின் சிங்கள ராணுவம் கொன்று குவித்து வருகிறது. காயம் அடைந்த தமிழர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்களோ, மருத்துவமனைகளோ இல்லாமல் ஈழத்தமிழர்கள் செத்து மடிந்து வருகிறார்கள்.
சிங்களர்களின் துப்பாக்கிகளுக்கு பலியான தமிழர்களின் சடலங்கள் சாலையோரங்களிலும், மண் மேடுகளிலும், மலை முகடுகளிலும் சிதறி கிடக்கிறது என்ற தகவல் நம் நெஞ்சங்களை பதற வைக்கிறது. இலங்கை தமிழர்களை காப்பாற்றக்கோரி முத்துக்குமார் உள்பட பலர் தீக்குளித்து இறந்துள்ளனர்.
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், வணிகர் சங்கங்கள், தொழில் அமைப்புகள் ஒன்று கூடி இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தி கடந்த 4-ந்தேதி பொது வேலை நிறுத்தத்தை தமிழ்நாட்டில் வெற்றிகரமாக நடத்த காட்டியது.
கடந்த 7-ந்தேதி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள், கிராமங்களில் மாபெரும் கறுப்புக்கொடி ஊர்வலமும், கடந்த 17-ந்தேதி மனித சங்கிலி போராட்டமும் நடைபெற்றது.
19-ந்தேதி வியாழக்கிழமை மாலை 5 மணியளவில், கோவை ராஜவீதி தேர்நிலைத்திடலில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. நிறுவன தலைவர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், பாரதீய ஜனதா துணைத்தலைவர் எச்.ராஜா, ம.தி.மு.க. அவைத் தலைவர் மு.கண்ணப்பன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, தேசியலீக் மாநில தலைவர் பசீர் அகமது, மற்றும் புதிய பார்வை ஆசிரியர் எம்.நடராஜன் உள்பட தலைவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தியும், பிரணாப் முகர்ஜியும் கைவிரித்து விட்டதாக டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளதால், இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பான போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்த அறிவிப்பை தலைவர்கள் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications