ஜனாதிபதி ஆட்சி வேண்டுமாம்-சு.சுவாமி சொல்கிறார்

Subscribe to Oneindia Tamil

Swamy
மதுரை: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. அரசியலமைப்பு சட்டப்படி நிர்வாகம் செய்ய முடியாமல் திமுக திணறுகிறது. இதனால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் தீட்சிதர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வரும் சுவாமிக்கு சமீபத்தில் சென்னை உயர்நீதி்மன்றத்தில், நீதிபதிகள் முன்னிலையில் அடி உதை விழுந்தது. அவரை ஜாதிரீதியாக திட்டியவாரே, கோர்ட் ஹாலை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு அடித்து உதைத்தனர் வழக்கறிஞர்கள்.

இந் நிலையில் மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர்,

உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் முன்னிலையில் நான் தாக்கப்பட்டேன். என் மீது அழுகிய முட்டைகளையும் வீசினார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி நடத்த திமுக அரசு தவறிவிட்டது.

இதனால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வேண்டும். நான் தாக்கப்பட்டதை நேரில் பார்த்த நீதிபதிகள் மத்திய அரசுக்கு இது தொடர்பாக செய்ய வேண்டிய வழிமுறைகளை பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

உயர் நீதிமன்றத்தில் வைத்து நான் தாக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்தன என்பது குறித்து உச்ச நீதிமன்றம் அவர்களிடம் கேட்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட 25 வக்கீல்களையும் கைது செய்ய வேண்டும். அவர்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும்.

விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பாமக, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதன்மூலம் ஒரு தமிழர் பிரதமராவதற்கு வாய்ப்பு உள்ளது என்றார் சுப்பிரமணியம் சுவாமி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+