ஜனாதிபதி ஆட்சி வேண்டுமாம்-சு.சுவாமி சொல்கிறார்

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரத்தில் தீட்சிதர்களுக்கு சாதகமாக செயல்பட்டு வரும் சுவாமிக்கு சமீபத்தில் சென்னை உயர்நீதி்மன்றத்தில், நீதிபதிகள் முன்னிலையில் அடி உதை விழுந்தது. அவரை ஜாதிரீதியாக திட்டியவாரே, கோர்ட் ஹாலை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு அடித்து உதைத்தனர் வழக்கறிஞர்கள்.
இந் நிலையில் மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் முன்னிலையில் நான் தாக்கப்பட்டேன். என் மீது அழுகிய முட்டைகளையும் வீசினார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஆட்சி நடத்த திமுக அரசு தவறிவிட்டது.
இதனால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர வேண்டும். நான் தாக்கப்பட்டதை நேரில் பார்த்த நீதிபதிகள் மத்திய அரசுக்கு இது தொடர்பாக செய்ய வேண்டிய வழிமுறைகளை பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
உயர் நீதிமன்றத்தில் வைத்து நான் தாக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்தன என்பது குறித்து உச்ச நீதிமன்றம் அவர்களிடம் கேட்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட 25 வக்கீல்களையும் கைது செய்ய வேண்டும். அவர்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும்.
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பாமக, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதன்மூலம் ஒரு தமிழர் பிரதமராவதற்கு வாய்ப்பு உள்ளது என்றார் சுப்பிரமணியம் சுவாமி.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications