மணமகனுக்கு மயக்க ஊசி - முதலிரவில் பணத்துடன் தப்பிய மணப்பெண்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: முதலிரவில் மணமகனுக்கு மயக்க ஊசி போட்டு அவரின் 5 பவுன் தங்க நகை, பணம், செல்போன் ஆகியவற்றுடன் கம்பி நீட்டிய மோசடி மணமகளை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள சிவலூரை சேர்ந்தவர் செந்தூர்பாண்டி. கூலிதொழிலாளி. கடந்த 3 மாதங்களுக்கு முன் பாவூர்சத்திரத்தை சேர்ந்த புரோக்கர் அருணாசலம் என்பவர் செந்தூர்பாண்டியனை அணுகி நாகர்கோவிலில் ஒரு பெண் இருப்பதாகவும், அவரை 2வது திருமணம் செய்தால் உங்களுக்கு சொத்துக்கள் கிடைக்கும் என்றும் கூறினார்.

இதையடுத்து செந்தூர்பாண்டியனுக்கும் நாகர்கோவிலை சேர்ந்த வள்ளி என்ற பெண்ணுக்கும் 16-11-2008 அன்று திருமணம் நடந்தது. செந்தூர்பாண்டிக்கு காலில் புண் இருந்ததால் அதை குணப்படுத்துவதாக கூறி முதலிரவின் போது வள்ளி தூக்க மருத்தை ஊசிமூலம் ஏற்றியுள்ளார்.

சிறிது நேரத்தில் அவர் தூங்கி விடவே வள்ளி, அவரிடம் இருந்த 5 பவுன் தங்க நகை, செல்போன், பட்டுசேலை, ரூ.1500 ஆகியவற்றை தெரியாமல் எடுத்து ஒளித்து வைத்துக் கொண்டார். காலையில் செந்தூர்பாண்டியிடம் நாகர்கோவிலில் இருக்கும் தனக்கு சொந்தமான நகை, பணத்தை எடுத்து வரலாம் என்று கூறி வள்ளி அழைத்து சென்ள்ளார்.

புரோக்கர் அருணாச்சலம் உள்பட மூன்று பேரும் பஸ்சில் நெல்லை வந்தனர். புதிய பஸ் நிலையத்தில் செந்தூர்பாண்டியை விட்டுவிட்டு வள்ளி, அருணாசலம் இருவரும் நகை, பணத்துடன் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து செந்தூர்பாண்டி சாயர்புரம் போலீசில் புகார் செய்தார்.

இந்நிலையி்ல் ஏரல் அருகே பெருங்குளத்தில் உறவினர் தங்கியிருந்த வள்ளியை நேற்று முன்தினம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். வள்ளிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள புரோக்கர் அருணாசலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+