நெல்லை போலீஸ் கமிஷனர் முன் சீமான் 'சரண்'!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருந்த புதுச்சேரி மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே, இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சீமான் பேசினார் என்று காங்கிரஸ்காரர்கள் கொடுத்த புகாரின் பேரில் புதுவை போலீசார் சீ்மான் மீது வழக்குப் பதிவு செய்ததிருந்தனர்.
அவரைக் கைது செய்ய புதுவையிலிருந்து தனிப்படைப் போலீசார் சென்னை விரைந்தனர். ஆனால் சீமான் அவர்களிடம் பிடிபடாமல், ஈழத் தமிழர் ஆதரவுக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வந்தார்.
நேற்று முன்தினம் நெல்லையில் வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பேசிய சீமான், போலீசார் கண் முன்னாலேயே மாயமானார். கடந்த இரு தினங்களாக அவரை போலீசார் தேடி வந்தனர்.
சில பணிகளை முடிக்க வேண்டியிருப்பதால் தான் சரணடையவில்லை என்றும், நீதிமன்றத்தில் நானே சரணடைவேன் என்றும் நேற்று சீமான் கூறியிருந்தார்.
இதற்கிடையே காங்கிரசார் இப்பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பியதால், சீமானைப் பிடிக்க 5 தனிப்படைப் போலீஸார் அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
இந் நிலையில் இன்று நெல்லையில் நீதிமன்றத்தில் சீமான் சரணடையச் சென்றார்.
அப்போது அவரை போலீசார் வழிமறித்துக் கைது செய்தனர். பின்னர் நெல்லை மாநகர் காவல் ஆணாயர் முன்பாக சீமான் சரணடைந்ததாக அறிவித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சீமான் பின்னர் புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைக்கப்படலாம் என்று தெரிகிறது.
அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு காங்கிரசார் கோரிக்கை எழுப்பி வருவது கவனிக்கத்தக்கது.
உயர்நீதிமன்றத்தில் சீமான் முன்ஜாமீன் மனு:
முன்னதாக புதுச்சேரி போலீஸார் தன் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதால், முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி டி.சுதந்திரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க! 19,000 சரிவில் தங்க விலை! அள்ளிப் போட இது தான் சரியான நேரம்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
செவ்வாழை ரகசியம்: 48 நாட்கள் தொடர்ந்து பழத்தை சாப்பிட்டால் உடலில் நடக்கும் அந்த அதிசயம்..!












Click it and Unblock the Notifications