நெல்லை போலீஸ் கமிஷனர் முன் சீமான் 'சரண்'!

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதமிருந்த புதுச்சேரி மருத்துவக் கல்லூரி மாணவர்களிடையே, இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சீமான் பேசினார் என்று காங்கிரஸ்காரர்கள் கொடுத்த புகாரின் பேரில் புதுவை போலீசார் சீ்மான் மீது வழக்குப் பதிவு செய்ததிருந்தனர்.
அவரைக் கைது செய்ய புதுவையிலிருந்து தனிப்படைப் போலீசார் சென்னை விரைந்தனர். ஆனால் சீமான் அவர்களிடம் பிடிபடாமல், ஈழத் தமிழர் ஆதரவுக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி வந்தார்.
நேற்று முன்தினம் நெல்லையில் வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு கூட்டத்தில் பேசிய சீமான், போலீசார் கண் முன்னாலேயே மாயமானார். கடந்த இரு தினங்களாக அவரை போலீசார் தேடி வந்தனர்.
சில பணிகளை முடிக்க வேண்டியிருப்பதால் தான் சரணடையவில்லை என்றும், நீதிமன்றத்தில் நானே சரணடைவேன் என்றும் நேற்று சீமான் கூறியிருந்தார்.
இதற்கிடையே காங்கிரசார் இப்பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்பியதால், சீமானைப் பிடிக்க 5 தனிப்படைப் போலீஸார் அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.
இந் நிலையில் இன்று நெல்லையில் நீதிமன்றத்தில் சீமான் சரணடையச் சென்றார்.
அப்போது அவரை போலீசார் வழிமறித்துக் கைது செய்தனர். பின்னர் நெல்லை மாநகர் காவல் ஆணாயர் முன்பாக சீமான் சரணடைந்ததாக அறிவித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சீமான் பின்னர் புதுச்சேரி போலீசாரிடம் ஒப்படைக்கப்படலாம் என்று தெரிகிறது.
அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு காங்கிரசார் கோரிக்கை எழுப்பி வருவது கவனிக்கத்தக்கது.
உயர்நீதிமன்றத்தில் சீமான் முன்ஜாமீன் மனு:
முன்னதாக புதுச்சேரி போலீஸார் தன் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதால், முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி டி.சுதந்திரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications