நாங்குநேரி அருகே 5 வயது சிறுமி நரபலி?

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே 5 வயது சிறுமி கொடூரமாக கொல்லப்பட்டு உரக்குழியில் புதைக்கப்பட்டார். இது நரபலியாக இருக்குமோ என்று சந்தேகம் எழுந்துள்ளது.

நாங்குநேரி அருகேயுள்ள ஸ்ரீரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் சேகர். மீன்பிடி தொழில் செய்து வந்த இவருக்கு 7 குழந்தைகள் உள்ளனர். இவரது 5வது குழந்தை நம்பி செல்வம்.

கடந்த 15ம் தேதி மாலை வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி நம்பி செல்வம் திடீரென்று காணாமல் போனார். இதுகுறித்து சேகர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார்.

பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் நேற்று பகலில் ஊர் அருகே உள்ள உரக்குழி ஒன்றில் அழுகிய நிலையில் சிறுமியின் உடல் கிடந்தது. அவளது கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டிருந்தது. இடது காலும் சிதைக்கப்பட்டிருந்தது.

உடலை நாய்கள் தின்று கொண்டிருந்தன. இதையடுத்து செல்வத்தின் அக்காள் பார்த்து வந்து தனது தந்தையிடம் கூறினார்.

தகவல் அறிந்ததும் நாங்குநேரி டிஎஸ்பி சிதம்பரநாதன், இன்ஸ்பெக்டர் நல்லகண்ணு, மற்றும் போலீசார் ச்ம்பவ இடத்தி்ற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

சிறுமி நம்பி செல்வத்தை யாராவது கடத்தி சென்று கொலை செய்து உடலை உரக்குழியில் வீசியிருக்கலாம் என்று தெரிகிறது. நரபலிக்காக குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

எனினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே முழு விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+