பாமக கவுன்சிலருக்கு கன்னத்தில் கத்தி குத்து!
கும்பகோணம்: கும்பகோணத்தில் பாமக கவுன்சிலர் கத்தியால் குத்தப்பட்டு அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கும்பேகாணம் பேட்டை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரவிசந்திரன். இவர் 13 வது வார்டு பாமக கவுன்சிலராக உள்ளார்.
இதே பகுதியைச் சேர்ந்தவர் குஞ்சு என்பவரின் மகன் ஜான் (20) என்பவர் ஆடு திருடிய புகாரில் சிக்கி ஊர் பஞ்சாயத்தில் ரூ 3,000 அபராதம் கட்டியுள்ளார்.
தனக்கு அபராதம் விதிக்கப்பட முக்கிய காரணம் ரவிசந்திரன் என நினைத்த ஜான் அவரை எப்படியாவது தாக்க வேண்டும் நினைத்து, அதற்கான திட்டத்தை தயார் செய்துள்ளார்
அதன்படி ரவிந்திரன் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அங்கு வந்த ஜான், ரவிசந்திரன் கன்னத்தில் கத்தியால் குத்தினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
சிகிச்சைக்காக அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரனை நட்ததி வருகின்றனர்.