காங்கிரசிலிருந்து தமிழருவி மணியன் விலகல்
மதுரை: ஈழத் தமிழர் பிரச்;னையில் காங்கிரஸ் கட்சியின் நிலைபாடுகளால் கடும் அதிருப்தியடைந்துள்ள அந்தக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரரான தமிழருவி மணியன் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
மிகுந்த நேர்மைக்குப் பேர் போனவர் தமிழருவி மணியன். மூப்பனாருடனும் அவரது மகன் வாசனுடன் மிக நெருக்கமாக இருந்தபோதும் பதவி கேட்டு அலைந்ததில்லை. இவரை மக்களவை, சட்டமன்றத் தேர்தலில் நிறுத்த மூப்பனார், வாசன் முயன்றும் முடியவி்ல்லை.
கட்சி, பதவி, பணம் என்று அலையாத மணியன் சிறந்த தமிழ்ப் பற்றாளர். மிகச் சிறந்த எழுத்தாளர். இத்தனை காலம் கட்சியில் இருந்தாலும் வறுமையில் உழல்பவர். சமீபத்தில் தனது தாயாருக்கு அரசு பொது மருத்துவமனையில் தான் வைத்தியம் பார்த்தார். கேட்டால், எனக்கு அவ்வளவு தான் வசதி என்றார்.
இவரை வலுக்கட்டாயமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக்கினார் வாசன். ஆனால், இலங்கை விவகாரத்தில் தனது கட்சியின் செயல்களால் வெறுத்துப் போயிருந்தார்.
இந் நிலையில் ஈழத்தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பற்ற செயல்பாட்டை கண்டித்தும், இவ்விவகாரத்தில் கட்சித் தலைவர் சோனியாகாந்தி மெளனம் சாதித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்தும் தனது அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலும் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் மணியன்.
மதுரையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இலங்கையில் ராஜபக்சேவின் இனப் படுகொலை ராணுவம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. ஆனால் இப்பிரச்னையில் ஆளும் கட்சியின் தலைவர் என்ற வகையில் சோனியா மெளனத்தை கலைக்கவில்லை. அவருடைய தலைமையிலான கட்சிக்கு தமிழையும், தமிழ் சமுதாயத்தையும் அடகு வைக்க எனது இதயம் இடம் கொடுக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியில் 40 ஆண்டுகள் இருந்துள்ளேன். காங்கிரஸ் கட்சிக்கு மக்களுக்காக பாடுபடும் போர்க்குணம் இல்லை. இதனால் காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினர் உட்பட நான் வகித்த அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்கிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள 40 எம்.பி.க்களும் இணைந்து செயல்பட்டால், இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்க முடியும் என்றார் தமிழருவி மணியன்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications