பஸ் அதிபர் வீட்டில் ரூ 10 லட்சம் கொள்ளை!
சீர்காழி: சீர்காழி பஸ் அதிபர் வீட்டில் ரூ 10 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார தனிபடை அமைத்து தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டம், சீர்காழி அருகே உள்ளது தென்பாதி திரிபுரசுந்தரி நகர். இங்கு வசிப்பவர் உதயசந்திரன் (52). பஸ் அதிபர்.
இவர் கட்ந்த 21 ம் தேதி தனது குடும்பத்துடன் சென்னை சென்றார்.
இவரது வீட்டை ஈஸ்வரி என்பவர் தினமும் சுத்தம் செய்து வருவார். வழக்கம் போல் சம்பவத்தன்றும் ஈஸ்வரி வீட்டை சுத்தம் செய்தார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்து தெரியவந்தது. இதனையடுத்து ஈஸ்வரி உதயசந்திரனுக்கும், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உதயசந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பீரோவில் வைக்கப்பட்டிருந்த வைர நெக்லஸ் மற்றும் 75 பவுன் நகைகள் மற்றும் ரூ 95 ஆயிரம் ரொக்க பணம் என ரூ 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனதாக போலீசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை வலை வீதி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications