தமிழகத்தில் 500 தாற்காலிக ஆசிரியர்கள் திடீர் நீக்கம்
சென்னை: தமிழகத்தில் துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வந்த, சுமார் 500 தாற்காலிக ஆசிரியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதால் அந்தந்தப் பள்ளிகளின் பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் மூலமும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமும் தொகுப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதித்தது.
இந்நிலையில் சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவக்கப் பள்ளிகளை அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, பல பள்ளிகளில், அரசு ஆசிரியர்கள் வேலை நேரத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதும், தாற்காலிக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்டுள்ள தாற்காலிக ஆசிரியர்களை உடனடியாக பணிநீக்கம் செய்யும்படி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் சுமார் 500 ஆசிரியர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில் அரசின் இந்த அவசர முடிவால் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவது நிச்சயம்.
இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குநர் தேவராஜன் கூறுகையில், துவக்கப் பள்ளிகளுக்கு விரைவில் 6,000 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இப்போது போதுமான ஆசிரியர்கள் உள்ளனர்.
சில மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்களிடம் அனுமதி பெற்று தொண்டு நிறுவனங்களால் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சிலர், போதுமான கல்வித் தகுதி இல்லாமலும், தேவைக்கு அதிகமாகவும் இருந்ததால் அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்றார்.
-
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
கோவை டூ குமரி.. சுழற்றியடிக்கும் பேய் மழை.. 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
Election: இதுவரை 651 கோடி பறிமுதல்.. தமிழ்நாட்டில் ரூ.170 கோடி சிக்கியது.. தேர்தல் ஆணையம் தகவல் -
வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை! -
கோடையில் கொட்டும் கனமழை.. அடுத்த 2 நாட்களுக்கு விடவே விடாது.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்!












Click it and Unblock the Notifications