ஈராக்-அடுத்தாண்டில் யுஎஸ் படை வெளியேற்றம்
வாஷிங்டன்: வரும் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பெருவாரியான அமெரிக்க படைகள் ஈராக்கில் இருந்து வெளியேற்றப்பட்டு விடும் என்று தெரிகிறது.
கடந்த மாதம் 20ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்புபேற்று கொண்ட ஒபாமா, தேர்தல் வாக்குறுதியில் 16 மாதத்தில் ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படும் என தெரிவித்திருந்தார்.
இதையடுத்து விரைவில் அமெரிக்க படை நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதற்கு நேர்மாறாக அமெரிக்க அரசு சமீபத்தில் 17,000 ராணுவ வீரர்களை கூடுதலாக ஈராக் அனுப்பிவைத்தது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் ஈராக்கிலிருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றுவது குறித்து விவாதித்து வருவதாகத் தெரிகிறுது. இதற்கான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது ஈராக்கில் 1 லட்சத்து 42 ஆயிரம் அமெரிக்க படைகள் இருக்கின்றன. அவற்றில் 92 ஆயிரம் வீரர்கள் வரும் ஆண்டு ஆகஸ்டுக்குள் நாடு திரும்புவார்கள் என்று தெரிகிறது.
ஒருவேளை இடைப்பட்ட காலத்தில் ஈராக்கில் பிரச்சினைகள் எழுந்தால் இம்முடிவு மாற்றியமைக்கப்படும் எனவும் தெரிகிறது.