சேலம் அருகே மண் சரிந்து 3 தொழிலாளர்கள் பலி
சேலம்: சேலம் அருகே மணல் சரிந்து மூன்று தொழிலாளர்கள் பலியாயினர்.
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே வெள்ளைக் கல் பாறைகள் வெட்டி எடுக்கப்படுகின்றன.
இன்று காலையும் ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் கல் வெட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென மண் சரிவு ஏற்பட்டது.
இதில் மாதையன் (50), சந்திரா (45), வரதம்மாள் (55) ஆகிய தொழிலாளர்கள் மீது மண் சரிந்து விழுந்து மூடியது. மண்ணில் புதைந்த இவர்களைக் காக்க தீயணைப்பு நிலையத்திற்கும், பூலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தரப்பட்டது.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து புல்டோசர்களைக் கொண்டு மண்ணை அகற்றினர். ஆனால், அதற்குள் மூவரும் பலியாகிவிட்டனர்.
ரயில் மோதி 2 வாலிபர்கள் பலி:
இதற்கிடையே நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த நாகராஜன் (27), இவரது உறவினர் பிரதின் (21) ஆகியோர் அங்குள்ள ரயில் பாலத்தில் நடந்து சென்று கொண்டிந்தபோது சென்னையில் இருந்து ஈரோடு வந்த ரயில் மோதியது.
இதில் இருவரும் அதே இடத்தில் பலியாயினர்.












Click it and Unblock the Notifications