பி.எஸ்.என்.எல்.லின் இந்தியா கோல்டன் 50 திட்டம் இன்று முதல் அமல்

இது குறித்து பி.எஸ்.என்.எல்.தமிழ்நாடு சர்க்கிள் தலைமைப் பொதுமேலாளர் அலுவலகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.சார்பில், நாடு முழுவதும் ஒரு நிமிடத்துக்கு 50 காசில் பேசும் இந்தியா கோல்டன் 50 திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
இந்த திட்டத்தில் புதிய சிம்கார்டு, சாதாரண பிரீபெய்டு திட்டங்களுக்கான விலையில் கிடைக்கும். இந்த 50 காசு திட்டத்தில் சேருவதற்கு முதல் மாதம் 375 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதில் 30 ரூபாய்க்குப் பேசலாம். இது 30 நாட்களில் காலாவதியாகிவிடும். அதன்பிறகு மாதா மாதம் 375 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
நிமிடத்துக்கு 50 காசு மட்டுமே!
இந்த திட்டத்துக்கான பல்ஸ் ரேட் 60 வினாடிகள். இந்த திட்டத்தில் இந்தியா முழுவதும் எந்த லேண்ட்லைன் போனுக்கும் உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி.கட்டணம் நிமிடத்துக்கு 50 காசுகள்.
இந்த திட்டத்தில் குறிப்பிட்ட பி.எஸ்.என்.எல். எண்களுக்கான கட்டணச் சலுகைகள் கிடையாது.
ஐ.எஸ்.டி.
அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் இலங்கைக்கு நிமிடத்துக்கு 7 ரூபாய் 20 காசுகளும், நேபாளம், வங்காளதேசம், பூடான், மாலத்தீவு மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நிமிடத்துக்கு 9 ரூபாயும் ஐஎஸ்டி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனைத் தவிர ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, ஹாங்காங், குவைத், பக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஒரு நிமிடத்துக்கு 9 ரூபாய் 60 காசுகளும் இதர பகுதிகளுக்கு பேசுவதற்கு நிமிடத்துக்கு 12 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும்.
உள்ளூர் மற்றும் தேசிய அளவில் எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு 50 காசு வசூலிக்கப்படும்.
மேலும் தரைவழித் தொலைபேசியைப் பொறுத்தமட்டிலும் எஸ்.டி.டி.கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டு உள்ளது. இதுவரை 60 வினாடிகளுக்கு ஒரு அழைப்பாக கணக்கிடப்பட்டது. இனி அது 120 வினாடிகளாக நீட்டிக்கப்படுகிறது. இதனால் எஸ்.டி.டி.கட்டணம் வெகுவாக குறைகிறது.
இந்த கட்டணக்குறைப்பு பி.எஸ்.என்.எல். தொலை பேசிகளில் இருந்து செய்யப்படும் அனைத்து அழைப்புகளுக்கும் (தனியார் தரைவழி தொலைபேசிகளுக்கும்) பொருந்தும்.
மேலும் 95 வசதி கொண்ட நாட்டில் உள்ள எல்லாத் தொலைபேசி சந்தாதாரர்களுக்கும் 0 டயலிங் கொண்ட எஸ்டிடி கொடுக்கப்படுகிறது. 95 வசதி நாளையில் இருந்து நீக்கப்படுகிறது.
இதற்காக கூடுதல் டெபாஸிட் தொகை செலுத்த வேண்டியது இல்லை.
இன்று முதல் பேசுங்க, பேசுங்க, பேசிக்கிட்டே இருங்க ..
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா?












Click it and Unblock the Notifications