மகளின் காதல் தோல்வியால் மனமுடைந்த தந்தை தற்கொலை
சுரண்டை: நெல்லை மாவட்டம் கீழசுரண்டையில் மகளின் காதல் தோல்வியால் மனமுடைந்த தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
நெல்லை மாவட்டம் கீழசுரண்டை காமராஜ் நகரை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் கான்ட்ராக்டராக பணியாற்றி வருகிறார். இவர் மகள் கீதா. பீடி சுற்றி வருகிறார். கீதாவுக்கும் அதே தெருவை சேர்ந்த கட்டிட தொழிலாளியான முத்தையா மகன் ராஜேந்திரன் என்பவரும் கடந்த இரண்டு வருடமாக பழகி வந்தனர்.
இந்நிலையில் ராஜேந்திரனுக்கு அவரது பெற்றோர் உறவுக்கார பெண்ணை பார்த்து முடிவு செய்துள்ளனர். இதையறிந்த கீதா, ராஜேந்திரனிடம் தன்னை விட்டு வேறொரு பெண்ணை எப்படி திருமணம் செய்ய சம்மதிக்கலாம் என்று சத்தம் போட்டுள்ளார்.
ஆனால் ராஜேந்திரன் நான் உன்னுடன் நட்பாகதான் பழகினேன். உன்னை காதலிக்கவில்லை என்று கூறி மறுத்து விட்டார்.
இதுகுறித்து கீதா தனது தந்தையுடன் சென்று சுரண்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் ராஜேந்திரன் மற்றும் அவரது பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தினர். அப்போதும் ராஜேந்திரன் தான் கீதாவை காதலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
மகளின் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே என மனமுடைந்த தங்கராஜ் இன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications