வைகோ மீது 4 பிரிவுகளில் வழக்கு - பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு
தூத்துக்குடி:மத்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ உள்ளிட்ட 195 பேர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வைகோ உள்ளிட்டோரை 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் நேற்று புதிய அனல் மின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார்.
அப்போது இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்தியில் இருக்கும் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கறுப்புகொடி காட்டும் போராட்டம் நடத்தப்பட்டது.
கருப்புக் கொடிகளுடன், துடைப்பங்களுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சென்றனர்.
அதில் கலந்து கொண்ட மதிமுக பொது செயலாளர் வைகோ உள்ளிட்ட 195 பேர் கைது செய்யப்பட்டு, அருகில் இருந்த திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து இவர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல், சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சூழ்நிலையை உருவாக்குதல், சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுதல், உருவப்படம் எரித்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வைகோ, எம்எல்ஏக்கள் ஞானராஜ் மற்றும் வரதராஜன் என வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்கள் பெயர்கள் ஒவ்வொன்றாக வாசிக்கப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நள்ளிரவு வரை மண்டபத்திலே இருந்தனர்.
பின்பு அவர்கள் தூத்துக்குடியில் உள்ள முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் ஹேமந்த் குமார் உத்தரவிட்டார்.
இதையடுத்து வைகோ உள்ளிட்டோர் இன்று அதிகாலை ஐந்து மணியளவில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications