For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக: மதிமுக விலக மணிவண்ணன் கோரிக்கை

By Sridhar L
Google Oneindia Tamil News

திருப்பூர்: ஜெயலலிதா என்ற மாயையில் இருந்து மதிமுக விலக வேண்டும் என்று இயக்குனர் மணிவண்ணன் கூறினார்.

திருப்பூர் அனைத்து மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் 'நாதியற்றவனா ஈழத்தமிழன்?' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் மணிவண்ணன் பேசுகையில்,

கலைஞர் பேனா முனை என்பது வாள் என்பார். அந்த வாள் சொந்தகாரனை குத்தி கொண்டிருக்கிறது. இலங்கையில் தமிழ் இனம் வாழும் பகுதி சவக்காடாக உள்ளது.

திரைப்பட இயக்குனர் சீமான் உணர்ச்சிகரமாக பேச கூடியவர். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் என்று கலைஞர் கூறுகிறார். இந்த காமெடியை படத்தில் கூட வைக்க முடியாது.

தமிழக சட்டம்-ஒழுங்கை மத்திய அரசு கையில் வைத்து இருக்கிறது என்றால் கலைஞர் திமுகவை கலைத்து விட்டு காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து விடலாம்.

ஈழத் தமிழர்களுக்காக மதிமுக குரல் கொடுத்து வருகிறது. ஆனால் ஜெயலலிதாவுடன் கூட்டணி வகிப்பதால், அரசியல் நிர்பந்தம் காரணமாக இலங்கை தமிழர் பிரச்சினையில் மதிமுக செயல்படுவதில் தடைகள் உருவாகி வருகின்றன.

இதன்காரணமாக இவ்வளவு காலம் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு பாடுபட்டு வந்த மதிமுகவும் பழிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். ஜெயலலிதா என்ற மாயையில் இருந்து மதிமுக விலக வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X