திமுக-காங் வெற்றி கூட்டணி தொடரும்-ஆசாத்

காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் நேற்று சென்னை வந்தார்.
இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் அவர் கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டா.
பின்னர் மாலை 5 மணியளவில் முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்திற்குச் சென்று ஆசாத் சந்தித்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
லோக்சபா தேர்தல் குறித்தும் கருணாநிதியுடன் குலாம் நபி ஆசாத் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பின்னர் வெளியில் வந்த ஆசாத் செய்தியாளர்ளிடம் பேசுகையில், காங்கிரஸும், திமுகவும் அமைத்துள்ளது வெற்றிக் கூட்டணி. இந்த கூட்டணி வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும்.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளின் தேர்தல் பணிக்குழுக்களும் கூடி ஆலோசனை செய்து முடிவெடுக்கும் என்றார்.
ப.சிதம்பரம் கருணாநிதியுடன் சந்திப்பு
முன்னதாக இன்று காலை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.
அப்போது கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த சிதம்பரம், விரைவில் அவர் பூரண நலம் பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.












Click it and Unblock the Notifications