ஈழம்- பாரீஸிஸ் தமிழர்கள் பிரமாண்ட பேரணி
Subscribe to Oneindia Tamil
பாரீஸ்:இனப்படுகொலையை நிகழ்த்தி வரும் இலங்கை அரசுக்கு உலக சமுதாயம் எந்த உதவிகளையும் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் 7000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்ட பிரமாண்டப் பேரணி நடைபெற்றது.
தமிழ் இளையோர் அமைப்புடன் அனைத்துலக வர்த்தக கல்லூரியின் மாணவர் அமைப்பினர் இணைந்து சனிக்கிழமை இந்த ஊர்வலத்தை நடத்தினர்.
பாரிசின் புகழ்பெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் குறியீடாக விளங்கும் 'பாஸ்ரில்' சதுக்கத்தில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணியளவில் குடியரசு சதுக்கத்தை பேரணி வந்தடைந்தது.
சுமார் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில் தாயகத்தின் அவலங்களை விளக்கும் பதாகைகளை உயர்த்திப் பிடித்தபடியும், தமிழர்களின் தேசியக்கொடியை தாங்கிய படியும் தமிழர்கள் கலந்து கொண்டனர்.













Click it and Unblock the Notifications