புதுச்சேரி தொகுதியை மீண்டும் பெற காங் தீவிரம்
காரைக்கால், மாகி, ஏனாம் ஆகியவற்றை உள்ளடக்கிய புதுச்சேரி தொகுதி காங்கிரஸ் கோட்டையாக விளங்குகிறது.
கடந்த தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதை எதிர்த்து புதுச்சேரி காங்கிரஸ் தொண்டர்கள் பெரும் போராட்டத்தில் குதித்தனர்.
ஒருவழியாக காங்கிரஸாரை சமாதானப்படுத்தியது திமுக. இத் தொகுதியி்ல் போட்டியிட்ட பாமக வேட்பாளர் பேராசிரியர் ராமதாஸ் வெற்றி பெற்றார்.
ஆனால், இம்முறை திமுக கூட்டணியில் பாமக இடம் பெறுமா என்பது இந்த நிமிடம் வரை உறுதியாகவில்லை. இந் நிலையில் இந்தத் தொகுதியை பெறும் முயற்சியில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.
தமிழகம் புதுச்சேரிக்கான காங்கிரஸ் மேலிட பார்வையாளர் குலாம் நபி ஆசாதை சந்திக்க மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியம், முதல்வர் வைத்திலிங்கம் ஆகியோர் வரும் வியாழக்கிழமை டெல்லி செல்வர் என்று தெரிகிறது.
இதற்கிடையே கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் சோர்வைடைந்துள்ள புதுச்சேரி திமுக நிர்வாகிகள் இந்தத் தொகுதியில் திமுகவே போட்டியிட வேண்டும் என்று திமுக தலைமையிடம் கோரி வருகின்றனர்.
ஆனால், இதை காங்கிரசுக்கே திமுக விட்டுத் தந்துவிடும் என்றே தெரிகிறது.
கூட்டணி்க்குள் பாமகவும் வந்துவிட்டால் இந்தத் தொகுதியைப் பெருவதில் காங்கிரஸ், பாமக இடையே மீண்டும் மோதல் ஏற்படலாம்.