ஸ்டேடியத்தில் 4 வெடிகுண்டுகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
லாகூர்: இலங்கை கிரிக்கெட் அணி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற தீவிரவாதிகள் கடாப் ஸ்டேடியத்தில் விட்டுச் சென்ற 4 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் தீவிரவாதிகள் விட்டுச் சென்ற ஏ.கே.47 துப்பாக்கிகள் நிரம்பிய பையையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
2 வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. இவை தவிர மேலும் 2 குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை நிபுணர்கள் செயலிழக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து லாகூர் முழுவதும் பீதி நிலவுகிறது. பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications