பங்கு சந்தை: தொடர் சரிவுக்கு ஒரு சின்ன பிரேக்!
மும்பை: சென்செக்ஸில் இன்று காலையில் வர்த்தகம் துவங்கிய போது கடந்த இரு நாட்களின் சரிவு தொடர்ந்தாலும், பின்னர் லேசான முன்னேற்றம் தெரிந்தது. குறிப்பாக உலோகங்கள் பிரிவில் ஏற்பட்ட சாதகமான மாறுதல், சந்தை மீண்டும் பாஸிடிவ் ட்ராக்குக்குத் திரும்ப உதவியது.
நுகர்பொருள் உற்பத்தி நிறுவனப் பங்குகளும் இன்று சுமாரான லாபத்தில் கைமாறின.
பிற்பகல் 12 மணிக்குப் பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக பச்சைக்குத் தாவியது சென்செக்ஸ் குறியீட்டெண். ஆனால் வர்த்தகத்தில் ஒரு நிலையான போக்கு வரவே இல்லை.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இதே நிலைதான் நீடித்தது.
ஹிண்டால்கோ, ஸ்டெரிலைட், ரிலையன்ஸ் இன்ப்ரா, ஏசிசி மற்றும் கிராஸிம் பங்குகள் திருப்தியான வாபத்தில் கைமாறின.
வங்கித் துறை பங்குகளுக்கு இன்றும் பலத்த பின்னடைவு. குறிப்பாக ஐசிஐசிஐ, எச் டிஎப்சி போன்றவற்றின் பங்குகள் 2 சதவிகிதத்துக்கும் மேல் நஷ்டத்தில் கைமாறின.
ஆசிய பங்குச் சந்தைகளும் ஓரளவு இழப்பிலிருந்து மீண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.