பெரிய ரகசியம் மறைஞ்சிருக்கு..சாமி சொல்றார்
சென்னை: திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னணியில் மாபெரும் ரகசியம் மறைந்திருப்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திமுக-காங்கிரஸ் கூட்டணி நிலையானது என்று கருணாநிதி கூறியுள்ளார். இந்த கூட்டணிக்கு பின்னே மிகப்பெரிய ரகசியம் இருக்கிறது. அதை விரைவில் வெளியிடுவேன்.
இந்த கூட்டணி காரணமாக டெல்லியில் தமிழர்கள் மீதான மரியாதை குறைந்து விட்டது.
ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதி குடும்பம் பெற்ற பணத்தை மறைக்கவே இந்த கூட்டணி. இதன் பின்னணியில் மேலும் ரகசியங்கள் உள்ளன.
உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறிதது தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவான அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.
உயர்நீதிமன்றத்தில் பணியாற்ற பெண் காவலர்கள் அஞ்சும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. போராட்டத்தை கைவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிய பிறகும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை தொடர்வது நீதிமன்ற அவமதிப்பாகும்.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசும் எல்லா தலைவர்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
அதிமுகவுடன் எங்கள் கட்சிக்கு கூட்டணி பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை. அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் தமிழகம் முழுவதும் ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications