For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஏப்ரல் 9-காரைக்கால் அம்மையார் கோவில் கும்பாபிஷேகம்

By Sridhar L
Google Oneindia Tamil News

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது.

காரைக்கால் அம்மையார் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை நடத்துவது குறித்த கூட்டத்தில் புதுவை எதிர்கட்சித் தலைவர் நாஜிம் கலந்து கொண்டார்.

அவருடன் கூட்டத்தில் திருப்பணிக்குழு தலைவர் மகாவீர்சந்த், உறுப்பினர் பாலகிருஷ்ணன், சாந்தகுமார், இளங்கோவன், காரைக்கால் நகரமன்ற தலைவி பிரபாவதி, நகர்மன்ற உறுப்பினர்கள் ராணிகண்ணன், சந்திரா சிவராஜன், அன்புரோஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் நாஜிம் வெளியிட்ட அறிக்கையில்,

காரைக்கால் அம்மையார் கோவிலில் 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டது. பங்குனி மாதத்திற்குள் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன்பேரில் கோவில் தனி அதிகாரி ஆசைத்தம்பி மற்றும் திருப்பணிக்குழுவினர் திருப்பணி வேலைகளை விரைந்து செயல்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அடுத்த மாதம் ஏப்ரல் 9-ந் தேதி கும்பாபிஷேகம் செய்ய தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இம்மாதம் 13-ந் தேதியன்று காலை 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறுகிறது.

காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யப்படும்போது சோமநாயகி சமேத சோமநாதர் கோவிலுக்கும், அங்குள்ள பரிவார தெய்வங்களுக்கும் மற்றும் அருகில் இருக்கும் அய்யனார் கோவிலுக்கும் சேர்த்து கும்பாபிஷேகம் நடைபெறும் என்று கூறியுள்ளார் நாஜிம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X