வன்னியர் நல வாரிய செய்தியத் தடுத்தார் நரேஷ் குப்தா - கருணாநிதி
சென்னை: வன்னியர் பொது சொத்து நல வாரியம் அமைப்பது குறித்த செய்தி வரக் கூடாது என்று பத்திரிகை அலுவலகங்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா போனில் பேசித் தடுக்கப் பார்த்தார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
2.3.2009 அன்று மதியம் 3.30 மணியளவில்தான் மத்திய தேர்தல் ஆணையர் நாடாளு மன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவிக்கின்றார். அதற்கு பிறகு தான் தேர்தல் கட்டுப்பாடுகள் எல்லாம் நடைமுறைக்கு வருகின்றன.
ஆனால் 2 ஆம் தேதிக்கு முன்பு பிப்ரவரி 28 ஆம் தேதியோ, மார்ச் முதல் தேதியோ ஏன் 2 ஆம் தேதி காலையிலோ தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள் ஏடுகளில் வெளியே வரலாமா கூடாதா?
உதாரணமாக வன்னியர் பொது சொத்து நல வாரியம் என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதற்கான அதிகாரி நியமனம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு ஏடுகளுக்கு 2.3.2009 அன்று தரப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சில பத்திரிகையாளர்களுடன் தொலைபேசியில் பேசி அந்தச் செய்தியினை ஏடுகளிலே வெளியிடக் கூடாது என்று தடுத்திருக்கிறார் என்றால் அவருக்கு இதிலே ஏன் இப்படிப்பட்ட அக்கறை?
தேர்தல் ஆணையமும், தேர்தல் அதிகாரிகளும் செய்கின்ற செயல்கள் பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற போதிலும் இப்படியெல்லாம் செயல்கள் நடைபெறுகின்றன என்று மக்களுக்குத் தெரிவிக்கக் கூட கூடாதா என்ன? என்று கூறியுள்ளார் கருணாநிதி.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications