வன்னியர் நல வாரிய செய்தியத் தடுத்தார் நரேஷ் குப்தா - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வன்னியர் பொது சொத்து நல வாரியம் அமைப்பது குறித்த செய்தி வரக் கூடாது என்று பத்திரிகை அலுவலகங்களுக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா போனில் பேசித் தடுக்கப் பார்த்தார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

2.3.2009 அன்று மதியம் 3.30 மணியளவில்தான் மத்திய தேர்தல் ஆணையர் நாடாளு மன்ற பொதுத் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவிக்கின்றார். அதற்கு பிறகு தான் தேர்தல் கட்டுப்பாடுகள் எல்லாம் நடைமுறைக்கு வருகின்றன.

ஆனால் 2 ஆம் தேதிக்கு முன்பு பிப்ரவரி 28 ஆம் தேதியோ, மார்ச் முதல் தேதியோ ஏன் 2 ஆம் தேதி காலையிலோ தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள் ஏடுகளில் வெளியே வரலாமா கூடாதா?

உதாரணமாக வன்னியர் பொது சொத்து நல வாரியம் என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதற்கான அதிகாரி நியமனம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பு ஏடுகளுக்கு 2.3.2009 அன்று தரப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சில பத்திரிகையாளர்களுடன் தொலைபேசியில் பேசி அந்தச் செய்தியினை ஏடுகளிலே வெளியிடக் கூடாது என்று தடுத்திருக்கிறார் என்றால் அவருக்கு இதிலே ஏன் இப்படிப்பட்ட அக்கறை?

தேர்தல் ஆணையமும், தேர்தல் அதிகாரிகளும் செய்கின்ற செயல்கள் பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற போதிலும் இப்படியெல்லாம் செயல்கள் நடைபெறுகின்றன என்று மக்களுக்குத் தெரிவிக்கக் கூட கூடாதா என்ன? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+