ஈரோடு யாருக்கு?: சுப்புலட்சுமி-இளங்கோவன் கடும் போட்டி
ஈரோடு: ஈரோடு தொகுதியில் போட்டியிட திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கும் காங்கிரஸ் மத்திய அமைச்சர் இளங்கோவன் இடையே கடும் போட்டி உருவாகியுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு, மொடக்குறிச்சி ஆகிய சட்டசபை தொகுதிகள் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியிலும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர், சத்தியமங்கலம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் கோபி நாடாளுமன்றத் தொகுதியிலும் இருந்தன.
தொகுதி சீரமைப்புக்கு பிறகு திருச்செங்கோடு மற்றும் கோபி நாடராளுமன்றத் தொகுதிகள் நீக்கப்பட்டுவிட்டன. புதிதாக ஈரோடு, திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதிகள் உருவாகியுள்ளன.
கடந்த தேர்தலில் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்று மத்திய அமைச்சரானார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
அதே போல கடந்த தேர்தலில் கோபி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று மத்திய அமைச்சரானார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
இப்போது இந்த இருவரின் திருச்செங்கோடு மற்றும் கோபி தொகுதிகளே இல்லை. மாறாக அவை ஈரோடு மற்றும் திருப்பூர் தொகுதிகளாக மாறிவிட்டன.
சுப்புலட்சுமிக்கும் இளங்கோவனுக்கும் ஆதரவுள்ள பகுதிகள் ஈரோடு தொகுதிக்குள் வந்துவிட்டன. இதனால் ஈரோடு தொகுதியில் போட்டியிட இருவருமே தீவிரமாக முயன்று வருகின்றனர்.
ஈரோடு தொகுதியை நாம் கேட்டுக் பெற வேண்டும் என்று இளங்கோவனும், அதை விட்டுத் தந்துவிடக் கூடாது என்று சுப்புலட்சுமியும் தங்களது கட்சித் தலைமையிடம் வற்புறுத்தி வருகின்றனர்.
ஆனால், ஈரோடு தொகுதியை திமுக தன் வசமே வைத்துக் கொண்டாலும் சுப்புலட்சுமிக்கு அவ்வளவு எளிதாக மீண்டும் சீட் கிடைத்துவிடாது என்பதே உண்மை.
இங்கு போட்யிடிட திமுக 'ஹெவி வெயிட்களான' முன்னாள் எம்பிக்கள் கே.பி. ராமலிங்கம், கந்தசாமி ஆகியோரும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications