ஸ்ரீராம் சேனா சர்ச்சை- பாஜகவில் நி்ர்மலா
மங்களூர் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அவர், தாக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகவும் ஸ்ரீராம் சேனாவுக்கு ஆதரவாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து அவருர்ரு கடும் கண்டனம் தெரிவித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேணுகா செளத்ரி அவரை பதவி நீக்கம் செய்தார். இத்தனைக்கும் நிர்மலா காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். ஆனால் கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் சங் பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக மாறிவி்ட்டார்.
இந் நிலையில் கடந்த மாதம் கர்நாடகத்தில் அத்வானி பங்கேற்ற பாஜக விழாவில் நிர்மலாவும் பங்கேற்றார்.
இந்நிலையில் நேற்று அவர் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள மாநில பாஜக அலுவலகத்துக்கு சென்றார். அங்கு மகளிர் அணி பொதுச் செயலாளர் மங்களா ஸ்ரீதர் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார்.
தேர்தலில் போட்டியிட தயார்:
அவர் கூறுகையில், பாஜகவின் கொள்கைகளை ஏற்று அதன்படி செயல்படுவேன். வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரசின் தவறுகளை அம்பலப்படுத்துவேன். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்படி கட்சி எனக்குக் உத்தரவிட்டால் போட்டியிடுவேன். இல்லாவிட்டால் பாஜக வேட்பாளர்களின் வெற்றிக்காகப் பிரசாரம் செய்வேன் என்றார் நிர்மலா.