For Daily Alerts
Just In
ஒரே நாளில் 134 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்
சென்னை: சென்னை நகரில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 134 இன்ஸ்பெக்டர்கள் ஒரே நாளில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
லோக்சபா தேர்தலையொட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக பணியாற்றும் காவல்துறையினரை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை நகரில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 134 இன்ஸ்பெக்டர்கள் நேற்று ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான உத்தரவை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்தார்.
Comments
தமிழ்நாடு chennai சென்னை போலீஸ் transfer இடமாற்றம் loksabha election லோக்சபா தேர்தல் tamilnadu inspector இன்ஸ்பெக்டர்கள்
Story first published: Friday, March 6, 2009, 12:30 [IST]