For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே நாளில் 134 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை நகரில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 134 இன்ஸ்பெக்டர்கள் ஒரே நாளில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

லோக்சபா தேர்தலையொட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக பணியாற்றும் காவல்துறையினரை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் மாற்றப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை நகரில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 134 இன்ஸ்பெக்டர்கள் நேற்று ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பான உத்தரவை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X