ஒரே நாளில் 134 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை நகரில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 134 இன்ஸ்பெக்டர்கள் ஒரே நாளில் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
லோக்சபா தேர்தலையொட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக பணியாற்றும் காவல்துறையினரை மாற்ற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை நகரில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த 134 இன்ஸ்பெக்டர்கள் நேற்று ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான உத்தரவை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications