உயர்நிலைக்குழு கூட்டத்தை புறக்கணித்தார் கண்ணப்பன்
ம.தி.மு.க. உயர்நிலை மற்றும் ஆட்சி மன்ற குழு கூட்டம் சென்னை எழும் பூரில் உள்ள தாயகத்தில் நடந்தது. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.
அப்போது பாராளுமன்ற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, அ.தி.மு.க. விடம் எத்தனை தொகுதிகள் கேட்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் ம.தி.மு.க. அவைத் தலைவர் கண்ணப்பன் பங்கேற்கவில்லை.
முதல்வர் கருணாநிதியை, கட்சித் தலைவர் வைகோவின் அனுமதியில்லாமல் மருத்துவமனையில் போய் கணணப்பன் பார்த்ததைத் தொடர்ந்து வைகோ, கண்ணப்பன் மீது அதிருப்தியுடன் இருக்கிறார். இதன் காரணமாக மதிமுகவிலிருந்து விலகும் முடிவுக்கு கண்ணப்பன் வந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில், கட்சியின் உயர் நிலைக் குழுக் கூட்டத்திற்கு கண்ணப்பன் வராமல் புறக்கணித்தது அவர் கட்சி மாறப் போவதை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.