சுடுகாட்டு பாதை தராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் -கிராமத்தினர்
தூத்துக்குடி: சுடுகாட்டுக்கு பொது பாதை அமைத்து தராவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே குமரரெட்டியாபுரம் என்ற கிராமம் உள்ளது. இங்கு பல்வேறு சமுதாயத்தை சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரை சேர்ந்த பாப்பையா ரெட்டியார் என்பவர் சுமார் 2 ஏககர் நிலத்தை சுடுகாட்டிற்காக பயன்படுத்தி கொள்ள கிராம மக்களுக்கு கொடுத்தார். அதை கிராம மக்கள் சுடுகாடாக பயன்படுத்தினர்.
இந்நிலையில் சுடுகாட்டை சுற்றியுள்ள நிலங்களை அவரது வாரிசுகள் மற்றும் உறவினர்கள் விற்பனை செய்துவிட்டனர். அங்கிருந்த பாதைகள் மறைக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இறந்துபோனவர்களின் உடல்களை அந்த வழியாக கொண்டு செல்லும்போது சம்பந்தப்பட்ட நிலத்துக்கு சொந்தக்காரர்கள் தகராறு செய்து வருகின்றனர். இதனால் பொது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதையடுத்து சுடுகாட்டிற்கு செல்வதற்கு சுமார் 15 மீட்டர் அகலமும், 300 மீட்டர் நீளமும் கொண்ட பொதுப்பாதை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஊர் தலைவர் கூறுகையில், இந்த கிராமத்தில் அனைத்து சமுதாயத்தினரும் ஓற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலை எங்களை பிரித்து விடுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு அதிகாரிகளும், வருவாய் துறை அலுவலர்களும் இந்த இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்து ஊர் பகுதியில் இருந்து சுடுகாடு வரை செல்ல பொது பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படி அமைக்காவிட்டால் மார்ச் 10ம் தேதி மக்களை திரட்டி ஓட்டபிடாரம் தாசில்தார் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்.
அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் பாராளுமன்ற தேர்தலையும் புறக்கணிப்போம் என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications