ஆண்டிமடம் அருகே கணவன், மனைவி கழுத்தறுத்துக் கொலை

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கணவனும், மனைவியும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.

ஆண்டிமடம் அருகே உள்ள சூரக்குழி வீரவாஞ்சிநகர் இருளர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (40) இவரது மனைவி பார்வதி (35). இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளனர்.

இன்று அதிகாலை வீரவாஞ்சிநகர் அருகில் உள்ள முந்திரி காட்டுக்கு அந்த பகுதியைச்சேர்ந்த சென்ற சிலர் செல்வராஜும், பார்வதியும் காட்டுக்குள் பிணமாக கிடந்ததை பார்த்து ஊருக்குள் தகவல் தெரிவித்தனர்.

இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களது முகத்திலும் சரமாரியாக வெட்டுகள் விழுந்துள்ளன.

அதிகாலையிலேயே செல்வராஜும், பார்வதியும் எழுந்து வெளியில் சென்றதை அக்கம் பக்கத்தினர் பார்த்து உள்ளனர்.

இந்த பயங்கர இரட்டைக் கொலை குறித்து ஆண்டிமடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+