உயர்நீதிமன்றத்துக்கு மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் மாலா கேட்டுக் கொண்டதன் பேரில் உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 19ம் தேதி வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பெரும் வன்முறையாக மாறியது. இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்ட நிகழ்ச்சி நாட்டையே உலுக்கி விட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்துக்குள் போலீஸார் வர உயர்நீதிமன்றம் தடை விதித்தது. கோர்ட்டுக்கு வெளியிலிருந்தபடி அவர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக ஹேமந்த் லட்சுமண் கோகலே நாளை பதவியேற்கவுள்ளார்.
இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றப் பதிவாளர் மாலா, தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், மோதல் சம்பவத்திற்கு முன்பு கொடுக்கப்பட்டிருந்ததைப் போன்ற போலீஸ் பாதுகாப்பை மீண்டும் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இதனை ஏற்று உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி இன்று முதல் மீண்டும் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றத்தின் நான்கு முக்கிய வாசல்களிலும் போலீஸார் நிறுத்தப்படுவர்.
மேலும், உயர்நீதிமன்றத்திற்குள் இதுவரை இயங்கி வந்த காவல் நிலையம் வெளியே போகிறது. தீவைத்து எரிக்கப்பட்டு விட்டதால் இந்தக் காவல் நிலையம் தற்காலிகமாக எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. விரைவில் தனி இடம் பார்த்து அங்கு உயர்நீதிமன்றக் காவல் நிலையம் இடம் பெயரவுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம் -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications