For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைச்சரானார் கருணா-ராஜபக்சே பதவி பிரமாணம்

By Sridhar L
Google Oneindia Tamil News

கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதி கருணாவுக்கு அமைச்சர் பதவி தந்துள்ளார் அதிபர் ராஜபக்சே.

நேற்று அவர் இலங்கை தேசிய ஒற்றுமை மற்றும் மறு சீரமைப்பு துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ராஜபக்சே பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தளபதியாக இருந்த கருணாவின் கட்டுப்பாட்டில் தான் கிழக்குப் பகுதியை ஒப்படைத்திருந்தார் பிரபாகரன்.

ஆனால், கடந்த 2004ம் ஆண்டு பல்லாயிரக்கணக்கான புலிகளுடன் எல்டிடிஇ இயக்கத்தை விட்டு வெளியேறிய கருணா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை தொடங்கினார்.

இதையடுத்து ராணுவத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் கருணாவுக்கு முதலில் எம்பி பதவி தந்தார் ராஜபக்சே.

இந் நிலையில் நேற்று தனது ஆதரவாளர்களுடன் சென்று ராஜபக்சேவை சந்தித் கருணா அவரது அமைப்பைக் கலைத்துவிட்டு ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சியில் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் அவருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது. உடனடியாக பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார் ராஜபக்சே.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X