For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொட்டை பாக்கு கடத்தியவர் 'காபிபோசா'வில் கைது

By Sridhar L
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: இந்தோனைசியாவில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக கொட்டை பாக்கு கடத்திய தூத்துக்குடி தொழிலதிபரை போலீசார் கைது செயது, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்தோனேசியாவிலிருந்து தூத்துக்குடிக்கு கொட்டை பாக்கு கடத்தி வரப்பட்டு, நாக்பூரில் உள்ள ஒரு பாக்கு கம்பெனிக்கு கொண்டு செல்ல முயன்றபோது அவற்றை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் இதில் தூத்துக்குடியை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டது தெரிய வந்தது. இதன் உரிமையாளரான சென்னையை சேர்ந்த நிதின்நாயார் என்பவர் இதுபோன்ற கடத்தலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் தொடர்ந்து இக்குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை கடத்தல் மற்றும் வெளிநாட்டு பொருளாதார குற்றவியல் சட்டமான காபிபோசா (COFEPOSA) சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சென்னை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு கூடுதல் இயக்குனர் அரசுதுறை இணை செயலாளருக்கு பரிந்துரை செய்தார்.

இதனை தொடர்ந்து நிதின்நாயாரை காபிபோசா சட்டத்தின் கீழ் கைது செய்ய அரசு உத்தரவிட்டது. தூத்துக்குடி மத்திய வருவாய் புனலாய்வு பிரிவு அதிகாரிகள் நிதின்நாயாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். நீண்ட இடைவெளிக்கு பின்பு தமிழகத்தில் காபிபோசா சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X