ஆடு திருடிய தகராறில் 4 பேர் வெட்டிக் கொலை

Subscribe to Oneindia Tamil

சேரன்மகாதேவி: நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஆடு திருடியது தொடர்பாக நடந்த மோதலில் நான்கு பேர் அநியாயமாக வெட்டிக் கொல்லப்பட்டனர்.

வீரவநல்லூர் அருகே அத்தாளநல்லூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை என்ற நவநீதகிருஷ்ணன். விவசாயி. இவர் வளர்த்து வந்த 4 ஆடுகள் காணாமல் போயின.

இதுகுறித்த சின்னத்துரை உப்பூரை சேர்ந்த மாயாண்டியிடம் எனது ஆடுகளை நீ திருடினாயா என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று மாலை சின்னத்துரை தனது அக்காள் பழனியம்மாளுடன் உப்புவாணிமுத்துரில் உள்ள வயலில் அறுவடை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மாயாண்டி மற்றும் அவரது நண்பர்கள் குணசேகரன், மகாராஜன் உள்ளிட்ட 8 பேர் சின்னத்துரையுடன் தகராறு செய்தனர். தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மாயாண்டி அரிவாளால் சின்னத்துரையை சராமரியாக வெட்டினார்.

தடுக்க வந்த அவரது அக்காள் பாண்டியம்மாளுக்கும் வெட்டி விழுந்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

பாண்டியம்மாளின் மகன் மணிகண்டன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மேலும் சின்னத்துரையின் உறவினர்கள் முத்துபாண்டி, மற்றொரு மணிகண்டன், மற்றும் மாயாண்டியின் நண்பர் குணசேகர் ஆகியோருக்கும் சராமரி வெட்டு விழுந்தது.

அனைவரும் அம்பை, நெல்லை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்ததும் நெல்லை எஸ்பி ஆஸ்ரா கர்க், அம்பை டிஎஸ்பி ராஜமேகன், வீரவநல்லூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் நள்ளிரவில் சிவன் பாண்டியின் மகன் குணசேகர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+