திமுகவுடன் நாளை பேச்சு-காங்கிரஸ் குழு ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அமைத்துள்ள தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் காங்கிரஸ் குழு நாளை முதல் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளது. திமுகவுடன் பேச வேண்டியது தொடர்பாக காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழு உறுப்பினர்கள் கூடி இன்று ஆலோசனை நடத்தினர்.

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது. இதில் சிதம்பரம் பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் இக்குழுவினர் தவிர கிருஷ்ணசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இம்முறை 15 இடங்கள் வரை கேட்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அந்த இடங்கள் எவை எவை என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் பேசப்பட்டது.

இக் கூட்டத்திற்குப் பின்னர் தங்கபாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக அமைத்துள்ள ஐந்து உறுப்பினர் குழுவுடன் நாளை மால 5 மணிக்கு நாங்கள் பேசவுள்ளோம்.

இது முதல் கட்ட பேச்சுவார்த்தையாகும். எங்களது கருத்துக்களை, கோரிக்கைகளை அவர்களிடம் தெரிவிப்போம். அதுகுறித்தே இன்று ஆலோசனை நடத்தப்பட்டது என்றார்.

ஸ்ரீபெரும்புதூர் கோரி ஆர்ப்பாட்டம்:

இதற்கிடையே, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை காங்கிரஸுக்கே ஒதுக்க வேண்டும் என்று கோரி சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ. அருள் அன்பரசு தலைமையி்ல அவரது ஆதரவாளர்கள் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தி்ல் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+