பங்கு வர்த்தகம்: நஷ்டத்துக்கு ஒரு 'பிரேக்'!
மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின. எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கித்துறை பங்குகளில் நல்ல லாபத்தில் கைமாறியதால் இன்று வர்த்தகம் துவங்கியதிலிருந்து முடியும் வரை தொடர்ந்து சாதக நிலையிலேயே பங்கு விற்பனை நடந்தது.
ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனப் பங்குகள் நல்ல லாபத்தில் கைமாறின. டாடா மோட்டார், சன் பார்மா மற்றும் மாருதி சுசுகி நிறுவனப் பங்குகள் இன்று தேசிய பங்குச் சந்தையில் நல்ல விலைக்கு கைமாறின.
இன்று நஷ்டப் பட்டியலில் முதலிடம் பார்தி ஏர்டெல்லுக்குசான். இதன் தலைவர் மனோஜ் கொஹ்லி தனது பங்குகளை விற்றுவிட்டதால் முதலீட்டாளர்களும் உடனே விற்கத் தொடங்கிவிட்டனர். இதனால் 5.59 சதவிகிதம் நஷ்டத்தில் பங்குகள் கைமாறின.
ஜீ எண்டர்டெயின்மெண்ட், டிஎல்எப், சுஸ்லான் மற்றும் டாடா பவர் நிறுவனப் பங்குகளும் நஷ்டத்தில் விற்பனையாகின.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 8312.95 (152.95), நிப்டி 2601 (28.45) ஆகவும் நிலை பெற்றன.












Click it and Unblock the Notifications