கோவை: பயணிகள் கூட்டத்தில் பஸ் புகுந்து ஐவர் பலி
கோவை: கோவையில் தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து ரோட்டில் ஓரமாய் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள்.
கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்து சத்தியமங்கலம் சாலையில் சிபி பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது திடீரென பிரேக் பிடிக்கவில்லை.
இதையடுத்து பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது பஸ் மோதியது. இதில் சிலர் பஸ்க்கு அடியில் சிக்கினர்.
இந்த விபத்தில் கணபதி டெக்ஸ்டூல் பாரதியார் ரோட்டைச் சேர்ந்த சீத்தாலட்சுமி, கஸ்தூரிபாய் வீதியைச் சேர்ந்த ஜான் கேத்தரின், காந்திபுரம் பாலசுப்பிரமணி ஆகியோர் அதே இடத்தில் உடல் நசுங்கி பலியாகினர்.
மேலும் இந்த விபத்தில் பெரிய அம்மணி (45), பழனியம்மாள் (41), பூவாத்தாள் (41), ராமநாதன் (20), சுப்பு (60), சையது இக்மாயில் (27), பழனிச்சாமி (45), சாகர் (23) உள்ளிட்ட 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து பஸ் டிரைவர் கோவிந்தராக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications