கூட்டணி பேச்சு-தமிழக பாஜகவில் மூவர் குழு

நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
வரும் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமாகப் பேசுவோம்.
கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குமாரவேலு, மோகன்ராஜூலு, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரை கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளும், அங்கு போட்டியிடும் வேட்பாளர்களும் முடிவாகி விட்டது. தேர்தல் குழுவிடம் ஒப்புதல் பெற்று டெல்லி தலைமை பட்டியலை வெளியிடும்.
விரைவில் தேர்தல் குழு கூட்டம் நடைபெறும். இதில் வெங்கையா நாயுடு, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் பங்கேற்பர் என்றார்.
முன்னதாக நேற்று நாகர்கோவிலில் நிருபர்களிடம் பேசிய அவர்,
இந்தியாவில் அரசியலில் இரு துருவம் உருவாகி உள்ளது. ஒன்று பாஜக தலைமையிலான கூட்டணி, மற்றொன்று காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி. வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் தான் போட்டி. மூன்றாவது அணி என்பது போட்டியே அல்ல.
கடந்த காலத்தில் பாஜக கூட்டணி ஆதரவோடு தான் மூன்றாவது அணி ஆட்சி அமைத்துள்ளது. அது போன்று காங்கிரஸ் ஆதரவோடுதான் ஆட்சி அமைத்தது.
அத்வானி பிரதமராக வரவேண்டும் என்ற ஒரே லட்சியத்தில் தான் பாஜக களம் இறங்கியுள்ளது. திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணிக்கு பாஜக விரும்பவில்லை.
தமிழகத்தில் அனைத்து லோக்சபா தொகுதியிலும் போட்டியிடுவதை தவிர்த்து வெற்றி பெரும் தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டு போட்டியிட உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications