நடத்தை விதி மீறலைக் கண்காணிக்க 155 குழுக்கள்
சென்னை: சென்னை தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் மீறலை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 155 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் தேர்தல் நடத்தை விதிகள் அனைத்து வட்டங்களிலும் அமலாக்கப்படுவதைக் கண்காணிக்க 155 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி இத்தகவலைத் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்துப் பேசுகையில், சென்னையின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சென்னையில் உள்ள 155 வட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் முறையாக அமல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க மாநகராட்சியின் இளநிலைப் பொறியாளர்கள் தலைமையில் தலா ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்தந்த வட்டங்களில் டிஜிட்டல் பேனர்கள் நிறுவுதல், விளம்பரம் செய்வது ஆகியவற்றில் தேர்தல் நடத்தை விதி மீறல் இருந்தால் இக் குழுக்கள் கண்காணித்து தகவல் அளிக்கும். இதன்பேரில், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தற்போது சென்னையில் வாக்காளர் சரிபார்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதி நிலவரப்படி, மொத்த வாக்காளர்கள் 31 லட்சத்து 22 ஆயிரத்து 96.
இதில் 1 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை. கடந்த 3 நாள்களில் மட்டும் 25 ஆயிரம் கூடுதல் வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
விண்ணப்பம் செய்வோரில் தகுதியுள்ள வாக்காளர்கள் அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு கட்டடங்களில் தேர்தல் பிரசார விளம்பரங்கள் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி பெறாமல் தனியார் கட்டடங்களிலும் சுவர் விளம்பரங்களைச் செய்யக் கூடாது. இதை மீறுவோர் மீது புகார் தெரிவித்தால், நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் லக்கானி.
-
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications