சம்பத் கைது - மதிமுக 2 நாள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் போராட்டத்தையும் அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நாஞ்சில் சம்பத், இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோர் மீது ஏவப்பட்டு உள்ள தேச பாதுகாப்பு சட்ட அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மார்ச் 20-ந் தேதி வெள்ளிக்கிழமையும், சென்னையில் மார்ச் 21-ந் தேதி சனிக்கிழமையும், காலை 11 மணியளவில் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கோவையிலும், சென்னையிலும் நான் கலந்துகொள்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications