மாரடைப்பு-சென்னை விமானத்தில் வாலிபர் சாவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மலேசியாவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த விமானத்தில் வாலிபர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
கடலூரை சேர்ந்த 30 வயது வாலிபர் கண்ணாபிரான் மலேசியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இன்று அவர் கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சென்னை வந்தார்.
நடுவானில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் அசைவற்று கிடப்பதை சிறிது நேரம் கழித்துப் பார்த்த விமான சிப்பந்திகள் சென்னை கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சென்னையில் விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்சில் அவரது பிரேதத்தை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விமான நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகி்ன்றனர்.












Click it and Unblock the Notifications